Connect with us

Raj News Tamil

கள்ளக்காதலியிடம் தகராறு.. தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்..

தமிழகம்

கள்ளக்காதலியிடம் தகராறு.. தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்..

காரியப்பட்டி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே உள்ள கிழவனேரி கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கார்த்திக். ஏற்கனவே திருமணமான இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம், தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு கார்த்திக் சென்றபோது, இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், அந்த பெண்ணின் வீட்டிலேயே, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதையடுத்து, அவரது உடலை, பிரேத பரிசோதனை செய்வதற்காக, காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த உறவினர்கள், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், உறவினர்களுடன் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக்கின் கள்ளக்காதலியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top