Connect with us

Raj News Tamil

விநாயக சதுர்த்தியை கொண்டாடும் பாராளுமன்றம்!

இந்தியா

விநாயக சதுர்த்தியை கொண்டாடும் பாராளுமன்றம்!

இந்திய பாராளுமன்ற கட்டிடம் சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டநிலையில் ,கடந்த மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய கட்டிடத்தில்தான் நடைபெற்றது. தற்போது வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ,என்ன நோக்கத்திற்காக கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறித்து மத்திய அரசு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதனால், சிறப்புக் கூட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இதனைத்தொடர்ந்து 18-ந்தேதி வழக்கும்போல் பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும் என்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 19-ந்தேதி புதிய பாராளுமன்றத்திற்கு கூட்டம் மாற்றப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா 18-ந்தேதி மதியம் 12.39 மணி முதல் 19-ந்தேதி இரவு 8.43 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top