Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

விமானத்தின் அவசர கால கதவு திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல்

உலகம்

விமானத்தின் அவசர கால கதவு திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல்

தென் கொரியாவில் விமானம் ஒன்று 194 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. தேயாகு விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது.

தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்த போது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு நபர் கதவை திறந்துள்ளார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகு 9 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top