“தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்” – பவர் ஸ்டாரின் முன்னாள் மனைவிக்கு 2-வது திருமணமா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமானவர் பவன் கல்யாண். இவருக்கும், ரேணு தேசை என்பவருக்கும் திருமணமாகி, அது பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்தானது. தற்போது, இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல Youtube சேனல் ஒன்றிற்கு, ரேணு தேசை, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“அந்த சமயத்தில், உங்களுடைய குழந்தைகளுக்கு கவணிப்பாளர் ஒருவர் நிச்சயம் தேவை. அவர்களுக்கு உதவி தேவை. உங்களுக்கு திருமணம் ஆகும்போது, உங்களுடைய கணவருடன் நேரம் செலவிட வேண்டும். இந்த Process-ல், உங்கள் குழந்தைகள் தனித்துவிடப்பட வேண்டிய சூழல் உருவாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தந்தை இல்லாமல் ஏற்கனவே தவிக்கும் குழந்தைகள், பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். இன்னும் 2 அல்லது 3 வருடங்களில், குழந்தைகள் வளர்ந்துவிடுவார்கள். அவர்கள் கல்லூரிக்கு செல்வார்கள். அதன்பிறகு, அவர்கள் புதிய நண்பர்களை சந்திப்பார்கள்.

அவர்களுடனே, நிறைய நேரத்தை செலவிடுவார்கள். பின்னர், பெற்றோரை சார்ந்து அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே, பெற்றோர்கள் தேவைப்படுவார்கள். ஆனால், அனைத்து நேரங்களில், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தேவைப்பட மாட்டார்கள்” என்று கூறினார்.

மறுதிருமணம் தொடர்பான முடிவுக்கு, தன்னுடைய குழந்தைகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தன்னுடைய மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான ஆசையை குழந்தைகள் வெளிப்படுத்தி இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News