Connect with us

Raj News Tamil

மக்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது: சிவ்தாஸ் மீனா!

தமிழகம்

மக்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது: சிவ்தாஸ் மீனா!

சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில், மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘புயல் உருவாகியுள்ளதையொட்டி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மாலை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் நாளைக்கு தீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் சுமார் 1,700 தீயணைப்பு ஊழியர்கள் பணியில் உள்ளனர். சென்னை 43 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.

மாநகராட்சி, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் 24 மணி நேரமும் களப்பணியில் இருக்கின்றனர்.

அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது.

24*7 கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம்.

தீவிர மழையின்போது, அதிகம் காற்று வீசும்போது மக்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது’ என்றார்.

More in தமிழகம்

To Top