Connect with us

Raj News Tamil

குழந்தை கடத்துபவர் என எண்ணி வடமாநிலத்தவரை தாக்கிய சென்னை மக்கள்..!

தமிழகம்

குழந்தை கடத்துபவர் என எண்ணி வடமாநிலத்தவரை தாக்கிய சென்னை மக்கள்..!

சமீபகாலமாக குழந்தையை கடத்துகிறார்கள் என்ற வதந்தி நாடு முழுவதும் பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கிய நிலையில் நேற்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சென்னை விம்கோ நகர் பகுதியில் குப்பைகளை பொறுக்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது தோற்றத்தைக் கண்டு சந்தேகப்பட்ட சிலர், அவரிடம் யார்? எதற்காக இங்கே சுற்றி திரிகிறாய்? என்று விசாரித்துள்ளனர். ஆனால் அவரது மொழி புரியாததால் அவர் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அவர் குழந்தை கடத்துபவர் என எண்ணி அவரை தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்களிடமிருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

More in தமிழகம்

To Top