முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.