Connect with us

Raj News Tamil

Pet Lovers எல்லாரும் உஷாரா இருங்க ! வளா்ப்பு பூனையால் தந்தை மகன் பலி !

இந்தியா

Pet Lovers எல்லாரும் உஷாரா இருங்க ! வளா்ப்பு பூனையால் தந்தை மகன் பலி !

உத்தரபிரதேசம் கான்பூர் தேஹாட்டின் அக்பர்பூர் நகரை சேர்ந்தவர் தேஜாஸ் இவரது மகன் அங்கத் இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் ஒரு பூனையை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூனையுடன் விளையாடுவதும் அதற்கு உணவளிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தெருநாய் ஒன்று பூனையை கடித்ததால் அடுத்த சில நாட்களில் வெறிநாய்க்கடியின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

இதனை குடும்பத்தினர் யாரு கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பூனையுடன் அங்கத் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பூனை கீறியுள்ளது. இந்த நிலையில் அந்த அங்கத்தின் உடல் நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியுள்ளது.

பூனையின் அறிகுறிகள் அந்த அங்கத்திடம் தோன்றத் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார். அவருக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள் இருவரும் உயிரிழந்ததிற்கு பிறகு ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top