தமிழகம்
பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் – இமெயில் மூலம் வந்த மிரட்டல்
மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இமெயில் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இமெயில் மூலம் வந்த பெட்ரோல் குண்டுவீச்சு மிரட்டல் ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.