இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மார்பிங்: கல்லூரி மாணவி தற்கொலை!

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை மர்ம நபர் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் கல்லூரி முடிந்து விட்டு திரும்பிய பின் வீட்டிற்குள் வந்து கதவை உள்பக்கமாக தாளிட்டு போட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் அவரது சகோதரர் வீட்டிற்கு வந்து கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த நபர் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மாஃபிங் செய்து பதிவு செய்து விடுவேன் என மிரட்டலை அடுத்து இரண்டு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News