தமிழகம்
“ராணுவத்தில் சேர வேண்டும்” – பெரம்பலூரில் நடைபெற்ற உடல் தகுதித் தேர்வு!
பெரம்பலூர் அருகே, ராணுவத்தில் சேருவதற்கான, உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு, முதல் நிலைத் தேர்வு வைக்கப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வும், சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த ராணுவ அதிகாரிகள் முன்னிலையில், இந்த ஆட்சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இருந்து முதல்நிலைத் தேர்வை வெற்றி பெற்றவர்களுக்கு, பெரம்பலூரில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்த இந்த நிகழ்வில், ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
You must be logged in to post a comment Login