Connect with us

Raj News Tamil

ரயில்வே தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டு…ஆபத்தாக மாறிவிட்டதா ரயில் பயணம்??

தமிழகம்

ரயில்வே தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டு…ஆபத்தாக மாறிவிட்டதா ரயில் பயணம்??

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் இரயில்கள் திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் இரயில் வந்தபோது, அந்த இரயில் இஞ்ஜினில் தென்னைமரத் துண்டு ஒன்று சிக்கியிருக்கிறது.

இதை அறிந்த இரயில் ஓட்டுநர் சாதுரியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். தண்டவாளத்தில் இருந்த தென்னைமரத் துண்டை அப்புறப்படுத்தி அருகில் உள்ள ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் அந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் வீடு ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்துள்ளது. இவர் தனது வீட்டில் இருந்த தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளத்தின் ஓரமாகப் போட்டுள்ளார். பிறகு மர்ம நபர்கள் சிலர் அந்த தென்னைமரத் துண்டை எடுத்து எக்ஸ்பிரஸ் இரயில் செல்லும் தண்டவாளத்தில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top