Connect with us

Raj News Tamil

கணவன், மனைவி சண்டையால் தரையிறக்கப்பட்ட விமானம்..!

உலகம்

கணவன், மனைவி சண்டையால் தரையிறக்கப்பட்ட விமானம்..!

லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த அவர் சகபயணிகளையும் அவதூறாக பேசியதை தொடர்ந்து விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி நிராகரிக்கப்படவே விமானமானது டெல்லியில் தரையிறக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கணவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் பாங்காக் நோக்கி அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

கணவன்,மனைவி சண்டையால் டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானத்தால், டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரப்பு நிலவியது.

More in உலகம்

To Top