Connect with us

Raj News Tamil

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது!

தமிழகம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது!

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படை அதிகாரிகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top