தமிழகம்
நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு சென்றார். தற்போது நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.