Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்

இந்தியா

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 89 தொகுதிகளில், 63% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வதோதரா, காந்தி நகர், அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

36,000க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், 26,409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.1,13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரது தொகுதியான சபர்மதி பகுதியில் உள்ள ரானிப் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top