Connect with us

Raj News Tamil

ஏழ்மையை ஒழிப்பேன் என்ற ராகுல் காந்தி.. விமர்சித்த பிரதமர் மோடி..

இந்தியா

ஏழ்மையை ஒழிப்பேன் என்ற ராகுல் காந்தி.. விமர்சித்த பிரதமர் மோடி..

இந்தியாவின் பிரம்மாண்ட ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும், நாடாளுமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக, ஜூன் 1-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.

இரண்டு முறை தேர்தலில் தொடர்ச்சியாக வென்ற பாஜக மீண்டும் வெல்லுமா? அல்லது காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? என்று கடும் போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில், இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதற்கு முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோசங்காபாத் பகுதியில், பொதுக் கூட்டம் ஒன்றில், பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், ஒரே முயற்சியில், நாட்டில் உள்ள ஏழ்மையை நீக்கிவிடுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருந்ததை, சாடினார்.

மேலும், இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ஒவ்வொரு வரி வார்த்தைகளும், இந்திய நாட்டை திவால் ஆக்க முடியும் என்றும் விமர்சித்தார்.

More in இந்தியா

To Top