Connect with us

Raj News Tamil

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

தமிழகம்

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

பிரதமர் மோடி நாளை (4.03.2024) மாலை 5.00 மணியளவில் நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை. மவுண்ட் பூந்தமல்லி சாலை. சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top