அர்ஜுனா விருது பெற்ற இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு..!

இந்திய ஹாக்கி அணியில் ஒருவரான வருண் குமார் தன்னை காதலிப்பதாக கூறி கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூரூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, தன்னை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற போதும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற போதும் இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2021-ல் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News