கவிஞர் கண்ணதாசன் 98-வது பிறந்தநாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை!

கவிஞர் கண்ணதாசன் 98-வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

கவிஞர் கண்ணதாசன் 98-வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

4 ஆயிறத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5000 மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதி உள்ள கண்ணதாசன் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News