Connect with us

Raj News Tamil

வானில் இருந்து விழுந்த மாயப்பெட்டி.. 50 கோடிக்கு விற்பனை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

சினிமா

வானில் இருந்து விழுந்த மாயப்பெட்டி.. 50 கோடிக்கு விற்பனை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

சதுரங்க வேட்டை படத்தை போல, இன்னும் 100 படங்கள் எடுத்தாலும், ஏமாறும் மக்கள், ஏமாந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த கூற்றுக்கு இன்னும் வலு சேர்க்கும் வகையில், தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ).

இவரை அணுகிய 5 பேர் கொண்ட கும்பல், வானில் இருந்து விழுந்த மாயப்பெட்டி ஒன்று, தங்களிடம் உள்ளது என்றும், இந்த பெட்டியை வைத்திருந்தால், கோடிகளில் பணம் புரளும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த பெட்டிக்கு 50 கோடி ரூபாய் என்று விலையும் நிர்ணயம் செய்துள்ளனர். இவர்களின் புருடா கதையை நம்பிய வெங்கடேஷ், மாயப்பெட்டியை பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த மாயப்பெட்டியை, ஐந்து பேரும் ஆட்டோவில் எடுத்து வந்துள்ளனர். அப்போது, காவல்துறையினா வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து அச்சம் கொண்ட அந்த கும்பல், ஆட்டோவை திருப்பிக் கொண்டு, தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து, மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த 5 பேர் செய்த தில்லாலங்கடி வேலைகளும், அதற்காக போடப்பட்ட பலே திட்டங்களும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறை, விசாரணை நடத்தி வருகிறது.

More in சினிமா

To Top