Connect with us

Raj News Tamil

காதலை போட்டுக் கொடுத்த உறவுக்கார பெண்.. விபரீத முடிவு எடுத்த கௌசல்யா.. தீயாக பரவிய ஆபாச புகைப்படம்..

தமிழகம்

காதலை போட்டுக் கொடுத்த உறவுக்கார பெண்.. விபரீத முடிவு எடுத்த கௌசல்யா.. தீயாக பரவிய ஆபாச புகைப்படம்..

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கௌசல்யா. 24 வயதான இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக, தனது சொந்த ஊருக்கு சென்ற அவர், அங்கிருந்துக் கொண்டே, வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கௌசல்யா வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவுக்கார பெண், இந்த விஷயம் தொடர்பாக, கௌசல்யாவின் பெற்றோருக்கு கூறிவிட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த அவர், அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார்.

இதையடுத்து, உறவுக்கார பெண்ணின் புகைப்படங்களை சேகரித்த கௌசல்யா, அதனை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரவ வைத்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஆபாசமாக சித்தரித்தது கௌசல்யா தான் என்பதை கண்டறிந்து, அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணனையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top