Connect with us

Raj News Tamil

மீன் பிடிக்க முயற்சி.. கொலை வழக்கில் சிக்கிய மீனவர்.. நடந்தது என்ன?

தமிழகம்

மீன் பிடிக்க முயற்சி.. கொலை வழக்கில் சிக்கிய மீனவர்.. நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். உறவினர் வீட்டிற்கு சென்ற இவர், அங்கிருந்த கதவணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மீன் பிடிக்க வந்த மீனவர் ஒருவர், தோட்டா வெடியினை பயன்படுத்தி, சட்டவிரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

வெடி வீசி மீன்களை பிடிக்க முற்பட்டபோது, அது மோகன் குமார் மீது விழுந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நீரில் மூழ்கிய மோகன் குமாரின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோகன் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சட்டவிரோதமாக மீன் பிடித்த அந்த மீனவரை கைது செய்தனர். தோட்டா வெடியை பயன்படுத்தி மீன் பிடிப்பதால், அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும், சில மீனவர்கள் இவ்வாறு மீன் பிடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top