Connect with us

Raj News Tamil

திடீரென காணாமல் போன கணவன்- மாமியார்.. தேடிய காவல்துறைக்கு துப்பு கிடைக்கல.. இறுதியில் காத்திருந்த செம ட்விஸ்ட்..

இந்தியா

திடீரென காணாமல் போன கணவன்- மாமியார்.. தேடிய காவல்துறைக்கு துப்பு கிடைக்கல.. இறுதியில் காத்திருந்த செம ட்விஸ்ட்..

அசாம் மாநிலம் கௌஹாத்தி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருக்கு, பந்தனா கலிதா என்ற மனைவியும், ஷங்கரி என்ற தாயும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், பந்தனா கலிதாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை கிடைத்தது.

அந்த பணிக்கு அவர் சென்றபோது, அங்கு வந்த ஆண் ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஆனால், இதனை அறிந்த மாமியார், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அந்த பெண்ணை தடுத்துள்ளார். இருப்பினும், வேலைக்கு செல்வதில் உறுதியாக இருந்த கலிதா, தனது மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், தனது காதலுக்கு அவர் பிரச்சனையாக இருப்பதால், கொலை செய்ய முடிவு செய்த கலிதா, தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்துவிட்டு, உடலை அப்புறப்படுத்தியுள்ளார். இதேபோல், தனது கணவரையும் கொலை செய்துவிட்டு, அவரது உடலையும், நண்பர்கள் உதவியுடன், அப்புறப்படுத்தியுள்ளார்.

பின்னர், தனது கணவன் மற்றும் மாமியார் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், கலிதா தான் இருவரையும் கொலை செய்துள்ளார் என்பதை, விசாரணையின் மூலம் கண்டறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top