Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

திருமணத்தை மீறிய உறவு.. பிரச்சனை தந்த தம்பி.. 20 துண்டாக வெட்டிய அக்கா.. 8 வருடங்களுக்கு பிறகு கைது செய்த காவல்துறை..

இந்தியா

திருமணத்தை மீறிய உறவு.. பிரச்சனை தந்த தம்பி.. 20 துண்டாக வெட்டிய அக்கா.. 8 வருடங்களுக்கு பிறகு கைது செய்த காவல்துறை..

தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஸ்ரீ. இவரும், சங்கரப்பா என்ற நபரும், காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், காதலை கைவிட்ட சங்கரப்பா, வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு வசித்து வந்தார். திருமணமாகிய 6 மாதங்களிலேயே சங்கரப்பாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, தனியாக அறை எடுத்து, தனியார் நிறுவனம் ஒன்றில், அவர் பணிபுரிந்து வந்தார்.

இதுமட்டுமின்றி, தனது முன்னாள் காதலியான பாக்கிய ஸ்ரீ-யிடமும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இந்த பேச்சு, இவர்களிடையே மீண்டும் நெருக்கத்தை உருவாக்கி, காதலாக மாற்றியது. இந்நிலையில், சங்கரப்பா தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற பாக்கிய ஸ்ரீ, அவருடனே குடும்பம் நடத்த தொடங்கிவிட்டார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற பாக்கிய ஸ்ரீ, எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த குடும்பத்தினர், ஊர் முழுவதும் தேடி வந்தனர். இறுதியில், பாக்கிய ஸ்ரீ இருக்கும் இடத்தை அவரது தம்பி லிங்கராஜ் கண்டுபிடித்துள்ளார். “ஏற்கனவே திருமணமான சங்கரப்பாவுடன் வாழ்வது தவறு.. நீ என்னுடன் வந்துவிடு” என்று தனது அக்காவிடம், லிங்கராஜ் கூறியுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், காதலுக்கு இடையூறாக இருந்த தம்பியை கொலை செய்தார்.

மேலும், அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி, மஞ்சன அள்ளி ஏரியில் வீசினார். இதையடுத்து, அந்த காதல் ஜோடி, அங்கிருந்து தப்பியோடி, தலைமறைவாக இருந்து வந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் நீண்ட வருடங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் தான், தற்போது இருவரும் வசித்து வருகிறார்கள் என்பதை கண்டறிந்த காவல்துறையினர், ரகசியமாக சென்று, அவா்களை கைது செய்தனர். கொலை செய்துவிட்டு 8 வருடங்களாக தலைமறைவாக இருந்த காதல் ஜோடியை, காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ள சம்பவம், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top