Connect with us

Raj News Tamil

ஹெல்மெட் அணியாமல் செல்போனில் பேசி சென்ற காவல் உதவி ஆய்வாளர்!

Trending

ஹெல்மெட் அணியாமல் செல்போனில் பேசி சென்ற காவல் உதவி ஆய்வாளர்!

தாம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் மீது அபராதம் விதித்து,ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் சாலையில் சேலையூர் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பெருமாள் செல்போன் பேசியபடியும், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் முக்கிய சாலை வழியாக செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் பெருமாள் மீது செல்போன் பேசி கொண்டு, தலைகவசாம் அணியாமல் சென்றதாக இரண்டாயிரம் ரூபாய் அபாரத்தம் விதித்த போக்குவரத்து போலீசார், காவலர் உடையில் வீதிமீறலில் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கபட்டதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஏற்கனவே இரண்டு முறை போக்குவரத்து விதிமீறல் காரணமாக உதவி ஆய்வாளர் பெருமாள் மீது அபராதம் விதித்தது குறிப்பிடதக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in Trending

To Top