தமிழகம்
போலீசா?.. போக்குவரத்து துறையா?.. இருதுறை செயலாளர்கள் போச்சுவார்த்தை!
போக்குவரத்துத் துறைக்கு போலீஸாரிடையே மோதல் சூழல் நிலவும் நிலையில் இரு துறை செயலாளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரி அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க முடியாது என நடத்துனரிடம் காவலர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறை தரப்பில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட பேருந்துகள் மீது அபராதம் விதிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரின் இன்று (மே 25) சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.
இரு செயலாளர்கள் சந்திப்புக்கு பிறகு இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.