Connect with us

Raj News Tamil

காதலனை நம்பி தனியாக வந்த இளம்பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..

தமிழகம்

காதலனை நம்பி தனியாக வந்த இளம்பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் பள்ளி மாணவி. இவர், இன்ஸ்டாகிராம் மூலமாக, அருண் பிரசாத் என்ற இளைஞரின் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, இருவரும் நேரில் சந்தித்து, தனிமையில் இருந்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்த அருண் பிரசாத், அதனை காண்பித்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார்.

காதலனின் உண்மை முகத்தை அறிந்த அந்த மாணவி, தனது குடும்பத்தினரிடம், உண்மையை கூறி, கதறி அழுதுள்ளார். இதையடுத்து, அருண் பிரசாத்திடம் செல்போனை பிடுங்கிய குடும்பத்தினர், ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதற்கிடையே, அருண் பிரசாத் அங்கிருந்து, தப்பியோடியுள்ளார். அந்த மாணவியின் வீடியோ மட்டுமின்றி, பல பெண்களின் ஆபாச வீடியோக்களின், செல்போனில் நிறைந்து காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அந்த செல்போனை, காவல்துறையில் கொடுத்து, புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இப்போது வரை, அருண் பிரசாத் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top