தமிழகம்
“5 ஆயிரம் லஞ்சம் வேணும்” – காவல்துறை ஆய்வாளரை அலேக்காக தூக்கிய அதிகாரிகள்!
திருச்சுழி அருகே, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலில், களரி திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின்போது, நாடக நிகழ்ச்சி நடத்துவதற்கும், மைக் செட் அமைப்பதற்கும், அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் ராம நாராயணனிடம், கோவில் நிர்வாகத்தினர் அனுமதி கேட்டனர்.
ஆனால், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோவில் நிர்வாகத்தினர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அதிகாரிகள் கூறிய அறிவுறுத்தலின்பேரில், ரசாயணம் தடவிய நோட்டை, காவல்துறை ஆய்வாளரிடம் வழங்கியுள்ளனர். அந்த ரூபாய் நோட்டுக்களை அவர் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ராம நாராயணனை கைது செய்தனர்.
You must be logged in to post a comment Login