தமிழகம்
நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..! என்ன காரணம்?
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 2ஆயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த மோசடி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login