தேர்தல் 2024
அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு
சென்னை தி.நகரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் வாகனப்பேரணி நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாகனப்பேரணியின் போது சாலையோரங்களில் 113 அனுமதியின்றி பேனர்கள் மற்றும் 3 கட்அவுட்களை நிறுவிய பாஜகவினர் மீது சென்னை போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் . தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறாமல், பதாகைகள், போர்டுகளை அமைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.