தமிழகம்
பள்ளத்தில் சிக்கிய வாகனம்.. ஒரு மணி நேரம் போராடிய காவலர்கள்..
டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இதனால், 4 மாவட்டங்களில் இருந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர், வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது, அங்கு இருந்த பள்ளத்தில், காவல்துறை வாகனம் சிக்கியது. பின்னர், ஒரு மணி நேரம் போராடி, அந்த வாகனத்தை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
You must be logged in to post a comment Login