Trending
இப்படியும் ஒரு கூத்து; போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த போதை ஆசாமி!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உள்ள அனுமகொண்ட பகுதியில் ஏரி ஒன்று உள்ளது.
அந்த ஏரியில் நேற்று (ஜூன்11) காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஒருவர் மிதந்து கொண்டிருந்தார்.
இதனை கவனித்த அந்த பகுதி மக்கள் யாரோ இறந்து போய் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ளது என்று கருதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரற்ற உடல் போல் மிதந்து கொண்டிருந்த நபரின் முடியை பிடித்து இழுத்தனர்.
அப்போது திடீரென்று எழுந்த அந்த நபர் வெயிலுக்கு இதமாக கூலாக இருக்குமே என்று கருதி இங்கே நான் தூங்கி கொண்டிருந்தேன். என்னை ஏனப்பா டிஸ்டர்ப் செய்கிறீர்கள் என்று கூலாக கேள்வி எழுப்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் மது போதையில் ஏரி தண்ணீரில் படுத்து தூங்கி அப்படி செய்தது தெரிய வந்தது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)