Connect with us

Raj News Tamil

‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ : பாஜக எம்.எல்.ஏ போராட்டம்

அரசியல்

‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ : பாஜக எம்.எல்.ஏ போராட்டம்

நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசினார். அவருடைய பேச்சால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்றைய நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறியதற்காக இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு பதாகையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து தகவலறிந்த பேரவைத் தலைவர் செல்வம் தனது அறையில் இருந்து அசோக்பாபு எம்எல்ஏ தர்ணா போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்து அவரைச் சமாதானம் செய்தார். அப்போது, “ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டார். அதற்கு பேரவைத்தலைவர் செல்வம், “பேசலாம் வாங்க” எனக் கூறி அழைத்துச் சென்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top