Connect with us

Raj News Tamil

பொங்கல் பண்டிகை: மல்லிகைப்பூ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

தமிழகம்

பொங்கல் பண்டிகை: மல்லிகைப்பூ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

மதுரை மாட்டு தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம் இங்கு மதுரை மாவட்டம் விட்டுமின்றி ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டவரப்படுகின்றன.

நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப்பூ ரூபாய் 3,000, பிச்சிப் பூ ரூ.2,000, முல்லை ரூ.2,000, மெட்ராஜ் மல்லி ரூ.2,000, பட்டன் ரோஸ் 250,
பன்னீர் ரோஸ் ரூ.300, செண்டுமல்லி ரூ.100, அரளிப்பூ ௹.450, நேற்று மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3,000 உயர்வு முல்லை மற்றும் பிச்சிப்பு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2000 ரூபாய்க்கும் பொங்கல் பண்டிகை என்பதால் விலை கிடு கிடுவென்று விலை உயர்வு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

More in தமிழகம்

To Top