சினிமா
தொடர் தோல்வியால் முடிவை மாற்றிக்கொண்ட பூஜா ஹெக்டே..!
2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு வெளிவந்த பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சாரியா, எலிஜபில் பேச்சிலர் மற்றும் சர்க்கஸ் ஆகிய படங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தது.
இந்த படங்களில் நடிக்கும் போது ரூ. 3 முதல் ரூ. 3.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே தற்போது திடீரென தனது சம்பளத்தை குறைத்துவிட்டாராம். தற்போது ஒரு கோடி ரூபாய் வரை சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தொடர் தோல்வியால் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment Login