தமிழகம்
மதுரை அருகே ஓட்டப்பட்ட போஸ்டர்: பாஜகவினர் அதிர்ச்சி!
மதுரை திருமங்கலத்தில் பாஜகவினர் குறித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விகாரம் அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் சர்ச்சைக்குரிய முறையில் பாஜகவினர் பெயரோடு நேற்று (ஏப்.26) போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது அதில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் வரை சுருட்டிய நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போஸ்டர் ஒட்டிய சில மணி நேரங்களிலேயே அனைத்து போஸ்டர்களும் கிழிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த போஸ்டர் தொடர்பாக இன்று மீண்டும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் இதற்கு முன்னதாக ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றும் பாஜக மற்றும் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பதற்காக வேண்டுமென்று ஒட்டப்பட்டதாகவும் இதற்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு வார காலத்திற்குள் பாஜகவினர் பெயருடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.