தமிழகம்
அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையை கடக்கும், இதனால் அடுத்த 2-நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு மேலும் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி
1) சென்னை
2) திருவள்ளூர்
3) செங்கல்பட்டு
4) காஞ்சிபுரம்
5) விழுப்புரம்
6) வேலூர்
7) ராணிப்பேட்டை
8) கள்ளக்குறிச்சி
9) தஞ்சை
10) திருவாரூர்
11) நாகை
12) மயிலாடுதுறை
13) அரியலூர்
14) பெரம்பலூர்
15) புதுக்கோட்டை
16) சேலம்
17) கடலூர்
18) நாமக்கல்
19) திருப்பத்தூர்
20) திருவண்ணாமலை
21) தருமபுரி
புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login