தமிழகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் குருதி கொடையுடன் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் !
தமிழகம் முழுவதும் இன்று விடுதலை புலி இயக்கத்தின் தலைவா் மேதகு பிராபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அவாின் விரும்பிகள் பலா் நல்முறையில் அவாின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனா். அதன்படிஇன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் அவாின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நாம் தமிழர் கட்சி மற்றும் குருதி கொடை பாசறை சார்பில், இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்கள் கட்சி பொறுப்பாளர்கள் என 69 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.மேலும் இந்நாளில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழக முழுவதும் ரத்ததான முகாம், மரம் நடு விழா , மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளதாக நாம் தமிழா் கட்ச்சியிக் பொறுப்பாளர்கள் தெரிவித்தள்ளனா்.