தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் என்ற திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு, தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது, கல்லூரி காலத்தில் எழுதிய தேர்வு ஒன்றில், விடைக்கு பதிலாக, பிரதீப் ரங்கநாதன் கதை எழுதியுள்ளார்.
இந்த வினாத்தாளை திருத்திய ஆசிரியர், தயவு செய்து கதை எழுதாதே என்று, அந்த வினாத்தாளிலேயே எழுதியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த பிரதீப், “தேர்வில் கதை எழுதாதே என்று ஆசிரியர் என்னிடம் கூறினார். அதனால், கதை எழுதுவதையே என்னுடைய தொழிலாக மாற்றிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
Teacher asked me not to write stories in exams so i made it my profession .#Dragon Bookings open https://t.co/z1UWmjRVMj @Bookmyshow
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 18, 2025
Ps : This is just unit test , main exams i used to study well . pic.twitter.com/wntIeswhnI