அரசியல்
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம்!
சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து முதன்முறையாக அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதால் காரில் வந்த விஜயகாந்தை தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.