தமிழகம்
பத்மபூஷன் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது – பிரேமலதா விஜயகாந்த்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது: விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக விருதை பெற்றிருப்போம் என அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம் என கூறினார்.