Connect with us

Raj News Tamil

பேருந்து மீது லாரி மோதி விபத்து..4 பேர் பலி…22 பேர் படுகாயம்

இந்தியா

பேருந்து மீது லாரி மோதி விபத்து..4 பேர் பலி…22 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இதில் லாரி டிரைவரும் பேருந்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top