சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்..கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக பெரிய வசூலை எட்டாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்து நம்பிக்கையை தந்தது. இந்த நிலையில் தற்போது ‘ஸ்டார்’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால் இனி தமிழ் சினிமா மீண்டும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதைப்பற்றி கவின் இடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது ஒவ்வொரு நடிகரின் மார்க்கெட் உயரும் பொழுது அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவதில் எந்தவித தவறும் இல்லையே என்று கூறி இருக்கிறார்.

நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டதற்கு தயாரிப்பாளர் கே ராஜன் ரொம்பவே கோபமாக பதில் அளித்திருக்கிறார். எந்த ஒரு படமும் கவின் நடித்ததற்காக ஓடவில்லை. அந்தப் படத்தின் கதையை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் துணிந்து எடுத்த முடிவால்தான் கவினுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.

அது தெரியாமல் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும் அதிகமான சம்பளத்தை கேட்பது ரொம்பவே மட்டமானது. அதனாலயே சீக்கிரமாக சரிந்து விடுவார் என்று சாபம் விடும் அளவிற்கு தயாரிப்பாளர் கே ராஜன் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News