Connect with us

Raj News Tamil

தயாரிப்பாளர் ரவீந்தர் கைது! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

சினிமா

தயாரிப்பாளர் ரவீந்தர் கைது! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

லிப்ரா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரவீந்தர். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையை, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதி, சமீபத்தில் தான் தங்களது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 16 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், தயாரிப்பாளர் ரவீந்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, பாலாஜி என்பவர், மாதவ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவரை கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று சந்தித்த ரவீந்தர், போலி ஆவணங்களை காண்பித்து, 16 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார்.

நீண்ட வருடங்களாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், போலி ஆவணங்களை ரவீந்தர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top