துணை நடிகையிடம் கேவலமான செயல்.. கைது செய்யப்பட்ட புஷ்பா நடிகர்!

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் புஷ்பா. பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நண்பனாக நடித்திருந்தவர் ஜெகதீஷ்.

இவரை காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதாவது, துணை நடிகை ஒருவர், இளைஞர் ஒருவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து வைத்து, அந்த நடிகையை ஜெகதீஷ், மிரட்டி வந்ததாக கூறப்பட்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த துணை நடிகை, தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஜெகதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படத்திலும், முக்கிய வேடத்தில் நடித்து வந்த இவர், பாதி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து முடித்துவிட்டார்.

ஆனால், இன்னும் சில காட்சிகள், அவரை வைத்து படமாக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதனால், ஜெகதீஷ் கைது செய்யப்பட்டிருப்பது, புஷ்பா 2 படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News