Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“திமுக-வை எதிர்த்தால் உயிர் போயிடும்” – பகீரங்கமாக மிரட்டிய ஆா்.எஸ்.பாரதி!

தமிழகம்

“திமுக-வை எதிர்த்தால் உயிர் போயிடும்” – பகீரங்கமாக மிரட்டிய ஆா்.எஸ்.பாரதி!

திமுகவை எதிர்த்தவர்கள் யாரும் உயிருடன் இருந்ததில்லை என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று, நேற்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக் கொண்டு, தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு:-

“ஜெயலலிதா உயிரிழந்த பிறகு கண்ணீர் வடித்தவர் தான் கலைஞர் கருணாநிதி. ஆனால், ஜெயலலிதாவால், பணக்காரர்களான சிலரே, அவரை கொலை செய்துவிட்டார்கள்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“அண்ணாமலை சொத்துப்பட்டியல் வெளியிடுவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய தகவல் வெளியாகும் என்று நினைத்தேன். ஆனால், அது புஸ்வானம் ஆகிவிட்டது” என்று கூறினார்.

இதையடுத்து, ஆளுநரை விமர்சித்த பேசிய ஆர்.எஸ்.பாரதி,

“ஆளுநர் தனக்கு உண்டான பணிகளை செய்தால் மட்டும் நல்லது. திமுகவை எதிர்த்தவர்கள் யாரும் உயிருடன் இருந்ததில்லை” என்று பகீரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top