சினிமா
“பரவும் தகவல் அனைத்தும் வதந்தி” – ராகவா லாரன்ஸ் ட்வீட்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என்று பல்வேறு முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா பட சீரிஸ்களை இயக்கி, நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த இவர், இதுவரை முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய 4 படங்களை எடுத்திருக்கிறார்.
தற்போது, 5-வது பாகமாக, காஞ்சனா 4-ஐ எடுக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக, சமீபத்தில் தகவல் ஒன்று பரவியது.
இந்த தகவல் வைரலாகி பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் Hi.., காஞ்சனா 4 சம்பந்தமாகவும், நடிகர்கள் சம்பந்தமாகவும், இணையத்தில் பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி.
ராகவேந்திர புரொடக்ஷன் மூலமாக, அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார். இதன்மூலம், மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக பரவி தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2024/06/image.png)
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)