Connect with us

Raj News Tamil

கடன் தள்ளுபடி.. ஊதியம் உயர்வு.. விவசாயிகளுக்காக காங்கிரஸின் உறுதிமொழிகள்..

இந்தியா

கடன் தள்ளுபடி.. ஊதியம் உயர்வு.. விவசாயிகளுக்காக காங்கிரஸின் உறுதிமொழிகள்..

காங்கிரஸ் கட்சியின் விவசாயி ஆதரவு மாடலை, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 7-ஆம் தேதி அன்று, முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் நடைபெறுவதையொட்டி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள், மும்மரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், நிலம் இல்லாத விவசாயிகளின் ஊழியத் தொகை 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, அக்டோபர் மாதத்தின்போது, சட்டீஸ்கர் மாநிலம் ஒன்றில், பேரணி ஒன்றில், ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் எழுதப்படும்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்த முதல் நாளே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top