அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14,15,16-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14 தேதி முதல் 15 தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

16ம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிககளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News